×

மனநலம் குன்றிய சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை

மூணாறு: கேரள மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (எ) பிரதீப் (44). இவர் கடந்த 2022ம் ஆண்டு மூணாறு அடிமாலியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்தபோது, மனநலம் குன்றிய 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அடிமாலி போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து பிரதீப் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பிரதீப் குற்றவாளி என்பது உறுதியானது. இந்த வழக்கு தேவிகுளம் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்மிஜூ கே.தாஸ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று முன்தினம் நீதிபதி பி.ஏ.சிராஜூதீன் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் பிரதீப்பிற்கு 106 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ₹2.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post மனநலம் குன்றிய சிறுமி பலாத்காரம் குற்றவாளிக்கு 106 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Munnar ,Padmanabhan (A) Pradeep ,Thrissur, Kerala ,Adimali, Munnar ,
× RELATED மாட்டுப்பட்டி அணையில் பேட்டரி படகு சவாரி: சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்